Type Here to Get Search Results !

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி நுழைவு வாயில் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கெளரவ விரிவுரையாளர்கள்.


காரிமங்கலத்தில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 58 பேர் கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி நுழைவு வாயில் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பணிநிரந்தரம் மற்றும் யுஜிசி நிர்ணயித்த ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் வழங்கிட வழிவகை செய்ய வேண்டும். மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பினை வழங்கிட வேண்டும்.


கௌரவ விரிவுரையாளராக பணிபுரிந்து 60 வயது வரை பணியாற்றி சென்ற கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஓய்வூதியமாக ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கிட வேண்டும். பணி செய்த காலங்களில் உயிரிழந்த கௌரவ விரிவுரையாளர்களுக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்கிட வழிவகை செய்திட வேண்டும்.


அரசாணை எண் 56-யை அமல்படுத்திட வேண்டும் மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஒதுக்கீடாக நான்கு சதவீதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884