Type Here to Get Search Results !

மாராண்டஅள்ளி துணை மின் நிலைய அலுவலகத்தில் கள பணியாளர்களுக்கு மின் பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.


தர்மபுரி மாவட்டம், மாராண்டஅள்ளி துணை மின் நிலைய அலுவலகத்தில் கள பணியாளர்களுக்கு மின் பாதுகாப்பு பயிற்சி வகுப்பு உதவி செயற்பொறியாளர் மோகன்குமார் தலைமையில்  நடைப்பெற்றது.


இப்பயிற்சி வகுப்பில் மாரண்டஅள்ளி மின்வாரிய அலுவலகங்களில் பணிபுரியும் கள பணியாளர்கள் விபத்து ஏற்படாமல் பணி புரிவது குறித்தும், மின் பாதுகாப்பு சாதனங்கள் பயன்படுத்துவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது, அதனை தொடர்ந்து அனைத்து களபணியாளர்களுக்கும் மின் பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்பட்டது. 


இந்த பயிற்சி  வகுப்பில் உதவி பொறியாளர் திவாகர், அலுவலக பணியாளர்கள் மற்றும் மின் வாரிய கள பணியாளர்கள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies