Type Here to Get Search Results !

கல்கூடப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி மீது சொகுசு கார் மோதியதில் தாய் மகன் படுகாயம்.


தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அடுத்த அய்தாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்த புவனேஸ்வரி (வயது.34) இவரது மகன் இளவரசன் (வயது.17) இவர் உறவினர்களுடன் மாதேஸ்வரன் மலை கோயிலுக்கு செல்வதற்காக ஜெயசூர்யா (வயது.22) என்பவரின் சொகுசு காரில் கடந்த 25ம் தேதி கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு வீடு திரும்பி கொண்டிந்தனர்.

பாலக்கோடு அடுத்துள்ள கல்கூடப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது இவர்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த சரக்குலாரியின் பின் பக்கம் சொகுசுகார் மோதி விபத்துக்குள்ளானது, இதில் புவனேஸ்வரி, அவரது மகன் இளவரசன் இருவரும் படுகாயமடைந்தனர். இருவரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து குறித்து புவனேஸ்வரியின் கனவர் முத்துராஜ்  கொடுத்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies