தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த அமானிமல்லாபுரம், பாரதியார் நகரை சேர்ந்த முனிராசு ( வயது.41) பெயின்டராக வேலை செய்து வந்தார்.
இவருக்கு சக்தி என்ற மனைவியும், சத்ருகண்ணன் (வயது .14) பிருந்தா (வயது.8) பிரக்யா (வயது. 7) என்ற 3 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் பெயின்டிங் வேலை செய்து கொண்டிருக்கும் போது முனிராசு கண்ணில் பெயின்ட் விழுந்ததில் கண் பாதிப்பு ஏற்பட்டது.
கண் அறுவை சிகிச்சை செய்தும் 2 கண்களும் தெரியாததால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக மனமுடைந்த காணப்பட்டவர், நேற்று முன்தினம் 18ம் தேதி மாலை வீட்டில் உள்ள உத்தரத்தில் புடவையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

.jpeg)