Type Here to Get Search Results !

மாரண்டஅள்ளயில் கலைஞர் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாமை பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.


தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதார அலுவலர் அவர்களின் ஆலோசனைப்படி கலைஞர்  வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாமினை மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு  வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சிவகுரு முன்னிலை வகித்தார்.

இம்முகாமில் பொதுமருத்துவம், கண்மருத்துவம், பல் மருத்துவம், எலும்புமுறிவு சிகிச்சை, இருதய சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நல காசநோய் பிரிவு தோல்நோய், யோகா மற்றும் சித்த மருத்துவம் உள்ளிட்ட  அனைத்து பிரிவுகளை சார்ந்த மருத்துவர்கள் கலந்துகொண்டு 1130 நபர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு குறைபாடு உடையர்வர்களுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் 30 நபர்களுக்கு  சிறுநீர் பரிசோதனை, இரத்த பரிசோதனை, காசநோய் பரிசோதனை,   எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கார்த்திகேயன், யதிந்தர்,சுகந்தி ரமேஷ், மருத்துவர்கள் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சமுதாய சுகாதார செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies