Type Here to Get Search Results !

பாலக்கோடு ஜமாபந்தி நிகழ்ச்சியில் இலவச வீட்டு மனை பட்டாக்களுக்கு உடனடியாக தீர்வு கண்ட அதிகாரிகளுக்கு - நன்றி தெரிவித்த கிராம பொதுமக்கள்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வருவாய் கோட்டத்திற்க்கு உட்பட்ட புலிகரை, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, வெள்ளிசந்தை ஆகிய பிர்காவிற்க்கு உட்பட்ட  42 வருவாய் கிராமங்களுகான ஜமாபந்தி நிகழ்ச்சி  கடந்த 4 நாட்களாக நடைப்பெற்று வந்தன, இதில்  மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார்  தலைமை வகித்து பொதுமக்களிடம்  பட்டா மாற்றம், பட்டா பெயர் மாற்றம், இயற்கை மரணம், முதியோர் உதவி தொகை, புதிய ரேஷன் கார்டு, இலவச வீட்டுமனை உள்ளிட்ட 1104 மனுக்கள் பெற்று கொண்டார்.

அதில் 87 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. கடைசி நாளான இன்று வட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைப்பெற்ற ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சியில், 87 பயனாளிகளுக்கு சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் பயனாளிகளுக்கு வழங்கினார்.


அப்போது பிக்கனஅள்ளியை சேர்ந்த வீடில்லாத ஏழை எளிய மக்கள் அரசு வழங்கிய வீட்டு மனை பட்டாவிற்க்கு கடந்த 6 வருடமாக இடத்தை அளந்து தரவில்லை என்றும் எனவே இடத்தை அளந்து தர கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்டவர் உடனடியாக தாசில்தார், வி.ஏ.ஓ, சர்வேயருடன் பிக்கனஅள்ளி கிராமத்திற்க்கு சென்று நிலத்தை 43 பயனாளிகளுக்கு நிலத்தை அளவீடு செய்து ஒப்படைத்தார். மனு அளித்த சில மணி நேரங்களிலேயே விரைந்து நடவடிக்கை எடுத்த மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், தாசில்தார் ஆறுமுகம் ஆகியோருக்கு அக்கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.


இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் ஆறுமுகம்,  ஓ.ஏ.பி. தாசில்தார் ரேவதி,துணை தாசில்தார் ஜெகதீசன், வருவாய் ஆய்வாளர்கள் வி.ஏ.ஓக்கள் சாம்ராஜ், மாதப்பன், மாதேஷ், முருகேசன், குமரன், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies