Type Here to Get Search Results !

காரிமங்கலம்‌ சின்னமுதலிப்பட்டி மாந்தோப்பில் 30 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஆண் தூக்குபோட்டு சாவு.


தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே சின்ன முதலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி முனியப்பன், இவர் இன்று மாலை 5 மணிக்கு வீட்டின் பின்புறம் உள்ள தனது மாந்தோப்பிற்க்கு சென்றார். அங்கு மாமரத்தில் 30 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து முனியப்பன் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார் என்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies