பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையில் சிறப்பு சொற்பொழிவு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 2 மே, 2024

பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையில் சிறப்பு சொற்பொழிவு.


தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையின் சார்பாக சிறப்பு சொற்பொழிவு 'ஆங்கில உரையாடலில்  ஏற்படக்கூடிய தடைகளை எதிர்கொள்வது எப்படி ' என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. 


இதில் தூத்துக்குடி, கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் இளங்குமரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில் ஆங்கிலத்தில் உரையாடும்போது  தயக்கமின்றி சிறப்பாக பேசுவது பற்றியும், இவ்வாறான உரையாடல்களில் பொதுவாக செய்யப்படக்கூடிய தவறுகள் பற்றியும் அத்த தடைகளை எவ்வாறு கடந்து வந்து சிறப்பான ஆங்கிலம் பேசுபவராக உருவாவது என்பது பற்றியும் எடுத்துரைத்தார். 


முன்னதாக ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) முனைவர் மோகனசுந்தரம் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். துறைத் தலைவரும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமான முனைவர் சி. கோவிந்தராஜ் அவர்கள் விழா துவக்க உரையாற்றினார். முனைவர் கிருத்திகா வாழ்த்துரை வழங்கினார்.  முன்னதாக முதலாம் ஆண்டு மாணவி செல்வி.ஷைனி வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினரை செல்வி. லாவண்யா அறிமுகப்படுத்தி வைத்தார். இறுதியாக இரண்டாம் ஆண்டு மாணவி நிவேதிதா நன்றி உரை வழங்கினார். 


இந்நிகழ்வை மாணவி ஜனி தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஆராய்ச்சி மாணாக்கர்கள் சமீர்,  பெருமாள் மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் முனைவர் சரண்யா மீனா,  பூஜா  ஆகியோர் செய்து இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad