குடிநீர் பிரச்சினையை போக்க மத்திய மாநில அரசர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜி கே மணி வலியுறுத்தல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 2 மே, 2024

குடிநீர் பிரச்சினையை போக்க மத்திய மாநில அரசர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜி கே மணி வலியுறுத்தல்.


தர்மபுரி மாவட்டம் முழுவதும் குடிநீர் பிரச்சினை பல கிராமங்களில் எதிரொலிக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் குடும்பப் பொருளாதாரம்  என்பதும், குடும்பங்களுக்கு சோறு போடுவதும், குழந்தைகள் கல்விக்கு பயன்படுவதும் கறவை மாடுகள்தான். கறவை மாடுகளுக்கும் தண்ணீர் இல்லை. குடிப்பதற்கும் தண்ணீர் இல்லை. குடிநீர் பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை -  ஜி.கே.மணி.

பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட பல கிராமங்களில் செல்லுகின்ற இடங்கள் எல்லாம் குடிக்க தண்ணீர் இல்லை என்ற குரல் பெண்கள் மத்தியில் மேலோங்கி இருக்கிறது. இதேபோல் தர்மபுரி மாவட்டம் முழுவதும் கடுமையான குடிநீர் பிரச்சனை எழுந்துள்ளது. மழை இல்லாமல் கடுமையான வறட்சி நிலவுவதால் வெப்ப அலை வீசும் இச்சூழலில் குடிநீர் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பத்தாம் வகுப்பு மாணவி இருசக்கர வண்டியில் ஏழு குடங்களை வைத்தும், 12-ம் வகுப்பு மாணவி ஆறு குடங்களை இருசக்கர வண்டியில் வைத்தும், இதே போல் பெண்கள் குடங்களை எடுத்துக் கொண்டு இரண்டு, மூன்று கிலோமீட்டர் தூரம் தண்ணீர் எடுத்துச் செல்லும் நிலை பரிதாபமாக உள்ளது.


தர்மபுரி மாவட்டத்தில் குடும்பங்களின் பொருளாதார ஆதாரமாக விளங்குவதும், குடும்பங்களுக்கு சோறு போடுவதும், குழந்தைகளை படிக்க வைப்பதும் கறவை மாடுகள்தான். கறவை மாடுகளுக்கு தண்ணீர் இல்லை. மாடுகளுக்கு தீவனம் இல்லாமல் நெல் விளைந்த பிற மாவட்டங்களிருந்து வைக்கோல் கட்டு கட்டாக விலைக்கு வாங்கி வந்து எல்லா வீடுகளுக்கு முன் அடுக்கி வைத்திருப்பதை பார்க்க முடிகிறது. வைக்கோல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடுமையான வெயிலினால் தண்ணீர் பற்றாக்குறையாலும் மாடுகள் பால் கொடுப்பது, பால் கறக்கும் அளவும் குறைந்துள்ளது. 


இப்படி நெருக்கடியான சூழல் தர்மபுரி மாவட்டத்திலும் பல்வேறு மாவட்டங்களிலும் கடும் வறட்சியும் வெப்ப அலையும் நீடிப்பதால் குடிநீர் பிரச்சனையும் மேலோங்கி இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. இதையெல்லாம் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டி கடைசியாக நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் நான் (ஜி.கே.மணி) பேசும்போது கடுமையான வறட்சி ஏற்படும். மிகப்பெரிய குடிநீர் பிரச்சினையை சவாலாக சந்திக்கும் நிலை நேரிடும். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு மாநில அரசும், மத்திய அரசும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், தண்ணீர், தண்ணீர் என்ற குறலும் மக்கள் மத்தியில் எதிரொலிக்கும் என்பதையும் சுட்டிக்காட்டி வலியுறுத்தி பேசினேன்.        


அந்த நிலை இப்பொழுது நீடித்திருக்கிறது. எனவே குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு மக்கள் தவிக்கும் வாய்க்கு தண்ணீர் கொடுக்க, தாகம் தீர்க்க தண்ணீர் கொடுக்க, சமைப்பதற்கு தண்ணீர் கொடுக்க, கால்நடைகளுக்கு தண்ணீர் கொடுக்க, போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad