Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட டெங்கு கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் சங்கம் சார்பாக பொதுக்குழு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்.


தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றும் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு களப்பணியாளர்கள் சங்கம் சார்பாக பொதுக்குழு மற்றும் கலந்தாய்வு கூட்டம் கடத்தூர் ஒன்றியம் மணியம்பாடி  பெருமாள் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது .

இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள், மற்றும் நகராட்சி, பேரூராட்சி, முக்கிய நிர்வாகிகள்   கலந்து கொண்டனர், இக்கூட்டத்தில்  முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


  • தருமபுரி மாவட்டத்தில் உள்ள கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்    
  • சுகாதார ஆய்வாளரிடம் மதிப்பும் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்,
  • கொரானா காலங்களில் பணியாற்றிய கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது. என முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது


இக்கூட்டத்தில்  தருமபுரி மாவட்ட கவுரவத் தலைவர் பெரியசாமி,  பிரபாகரன் (மாவட்டத் தலைவர் ), மாது (துணைத் தலைவர் ), சந்திரன் (மாவட்ட செயலாளர் ), மாரியப்பன் (மாவட்ட துணை செயலாளர் ), அண்ணாமலை, ஆனந்தி, (மாவட்ட பொருளாளர்கள் ), மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணிகண்டன், பழனியம்மாள், இராதாகிருஷ்ணன், மாநில துணை செயலாளர் நா. சின்னமணி  மற்றும் சங்க உறுப்பினர்கள், உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884