அரூர் வேளாண்மை துறையில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் 2024 -25 கிராம திட்ட செயலாக்க குழு கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 1 மே, 2024

அரூர் வேளாண்மை துறையில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் 2024 -25 கிராம திட்ட செயலாக்க குழு கூட்டம்.


மே.1.அரூர் வேளாண்மைத் துறையில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் 2024 -25 கிராம திட்ட செயலாக்க குழு கூட்டம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் அரூர் அலுவலகத்தில் வேளாண்மை துணை இயக்குனர் மாநில திட்டம் தர்மபுரி திருமதி தேன்மொழி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்கள் கூறும் பொழுது அரூர் வட்டாரத்தில் 2024- 25 நிதி ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட கலைஞர் கிராமங்கள் ஜம்மன அள்ளி ,பே தாதம்பட்டி, கீழ் மொரப்பூர், மாம்பட்டி, பைரநாயக்கன்பட்டி, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட வேளாண்மை மற்றும் சகோதரத்துறைகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் ஒற்றுமையுடன் பணியாற்றி இந்த திட்டத்தை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கொண்டு சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள்.


மேலும் அவர்கள் கூறுகையில் வேளாண்மை துறையில் தரிசு நில தொகுப்புகள் கண்டறிதல் ,மற்றும் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல், மற்றும் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை செயல் விளக்கங்கள் விசைத்தெளிப்பான், வரப்பு பயிர் செய்தல், மற்றும் இதர திட்டங்கள் ஜிப்சம் மற்றும் ஜிங் சல்பேட் இடு பொருட்கள், பண்ணை கருவிகள் தொகுப்பு வழங்குதல் போன்ற திட்டங்கள் கலைஞர் கிராம விவசாயிகளுக்கு 80 %  முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறினார்கள்.


மேலும் இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலைத் துறையில் பழ செடிகள் மற்றும் தக்காளி, பப்பாளி, மா செடிகளும் காய்கறி விதை தொகுப்புகள் கலைஞர் கிராம விவசாயிகளுக்கு 80 % முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என்று கூறினார்கள் மேலும் பண்ணை குட்டைகள் அமைத்தல், தடுப்பணைகள் அமைத்தல், கோடை உழவுக்கு மானியம் வழங்குதல் ,உளர் களம் அமைத்தல் போன்ற திட்டங்கள் கலைஞர் கிராமங்களுக்கு 80 சதவீதம் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என்றும் கூறினார்கள்.


விவசாயிகள் மேற்கண்ட இடுபொருட்களை பெற்று விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் அரூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திருமதி சுதா மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர் திரு ராஜேஷ் கண்ணன் வேளாண்மை அலுவலர் திரு குமார், தோட்டக்கலை அலுவலர் திருமதி சங்கீதா ,துணை வேளாண்மை அலுவலர் திரு கோவிந்தராஜன் உதவி வேளாண்மை அலுவலர்கள் திரு ரமேஷ், திரு சிவன், திருரசூல், திரு வினோத் குமார் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் திரு தண்டாயுதம், திரு செஞ்சுரியன், திரு கர்ணன் அவர்களும் கலந்து கொண்டனர்.


மேலும் இந்நிகழ்ச்சியில் கால்நடை உதவி மருத்துவர் ,உதவி செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒன்றிய பணி மேற்பார்வையாளர், பஞ்சாயத்து தலைவர்கள் ,மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர்கள் மற்றும் வருவாய் துறை கிராம நிர்வாக அலுவலர்கள், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலர்கள், மற்றும் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை அலுவலர்கள், மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர்கள் மற்றும் உழவர் நண்பர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad