டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக மஞ்சப்பை விழிப்புணர்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 1 மே, 2024

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக மஞ்சப்பை விழிப்புணர்வு.


தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்து ஈச்சம்பாடி ஊராட்சி சார்ந்த E.அக்ரஹாரம் கிராமத்தில்   சமூக சேவை செய்து வரும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக பூமி வெப்பமாவதை தடுக்க மஞ்சப்பை, மரக்கன்று, மற்றும் தண்ணீர் பாட்டில் மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு  செய்யப்பட்டது.

இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கம்பைநல்லூர் உதவி காவல் ஆய்வாளர் திரு.நாவளவன், முதன்மை காவலர் திரு. கார்த்திக், உதவி காவலர் திருமதி.சத்யா மற்றும் அப்துல்கலாம் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள்  மு.சுரேஷ்,  ரா.அண்ணாசாமி, தமிழ்இலக்கியா,  சுஜித்ரா, கௌதம்சர்மா, தர்ணிஷ்வர்மன், விஷ்வா, விவேகம், மன்ற நிர்வாகத் தலைவர் நா. சின்னமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad