நிலத்தகராறில் முதியவரை தாக்கிய நபர் மீது மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 1 மே, 2024

நிலத்தகராறில் முதியவரை தாக்கிய நபர் மீது மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை.


தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த கோணம்பட்டி கிராமத்தை சேர்ந்த முதியவர் அண்ணாமலை (வயது.70). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ரங்கதுரை (வயது. 46) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை அண்ணாமலை தனது மாந்தோப்பில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ரங்கதுரை அண்ணாமலையிடம் தகராறில் ஈபட்டவர், ஆத்திரத்தில் அருகில் இருந்த கட்டையால் சராமாரியாக தாக்கியதில் அண்ணாமலை பலத்த காயமடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad