மை தருமபுரி அமைப்பின் மூலம் தொடக்கப்பள்ளி கரும்பலகைக்கு வண்ணம் பூசப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 1 மே, 2024

மை தருமபுரி அமைப்பின் மூலம் தொடக்கப்பள்ளி கரும்பலகைக்கு வண்ணம் பூசப்பட்டது.


மை தருமபுரி அமைப்பின் மூலம் பல்வேறு சமூக சேவைகள், கல்வி சேவைகள் செய்து வருகின்றோம். தற்போது கோடை விடுமுறை என்பதால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி கரும்பலைகளுக்கு கருப்பு வண்ணம் பூச முடிவெடுத்தோம். அதன் பணியில் இன்று தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகாவில் உள்ள புதன்அள்ளி கிராமம், சென்னியம்பட்டி, நார்த்தம்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கரும்பலகைக்கு கருப்பு வண்ணம் பூசப்பட்டது. அய்யா காமராஜர் அவர்களின் பாணியில் வகுப்பறை கரும்பலைகளுக்கு வண்ணம் தீட்ட முடிவெடுத்துள்ளோம். முடிந்தவரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற தொடக்க பள்ளி வகுப்பறை கரும்பலகைக்கு வண்ணம் பூச உள்ளோம். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad