உலகம் முழுவதும் மே 1 அன்று தொழிலாளர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் இல்லாமல் இந்த உலகில் எந்த ஒரு தொழிலும் சிறப்பாக செய்ய முடியாது. தொழிலாளர்களை போற்றும் விதமாக இன்றைய தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தருமபுரி செந்தில் குமார் டிபார்ட்மெண்ட் சார்பாக நூறு இனிப்புகள் வழங்கினர்.
மை தருமபுரி அமைப்பின் சார்பாக தருமபுரி நகரில் உள்ள சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கம், ஆட்டோ பணியாளர் நல சங்கம், உழைப்பாளிகள் போன்றவர்களுக்கு இனிப்புகள் வழங்கி தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டோம். இந்த தொழிலாளர் தின விழாவில் மை தருமபுரி அமைப்பின் சார்பாக தலைவர் தமிழ்செல்வன், அருணாசலம், முகமத் ஜாபர், அருண் பிரசாத், சந்திரசேகரன், விமலேஷ், சண்முகம், சதீஸ் குமார், விஜயகாந்த் ஆகியோர் தொழிலாளர் அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக