தேர்தல் நாளில் அனைத்து பகுதிகளிலும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இணைப்புதடையின்றி கிடைக்க அறிவுறுத்தல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 9 ஏப்ரல், 2024

தேர்தல் நாளில் அனைத்து பகுதிகளிலும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இணைப்புதடையின்றி கிடைக்க அறிவுறுத்தல்.


பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து தருமபுரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் திருமதி. அருணா ரஜோரியா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., காவல் பொது பார்வையாளர் திரு. விவேக் ஷியாம், இ.கா.ப., ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

ஏப்ரல் 19-ம் தேதி BSNL, Airtel, VI, jio ஆகிய நிறுவனங்களின் இணைப்புகள் துண்டிக்கப்படமால் தருமபுரி மாவட்டத்தில் அனைத்து மலைபகுதிகள், கடைகோடி பகுதிகளுக்கும் இணையதள சேவைகள் கிடைப்பதற்கும் அனைத்து வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உடனுக்குடன் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என தொலைதொடர்பு கிளை மேலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.


பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து தருமபுரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் திருமதி. அருணா ரஜோரியா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., காவல் பொது பார்வையாளர் திரு. விவேக் ஷியாம், இ.கா.ப., ஆகியோர் முன்னிலையில் இன்று (09.04.2024) நடைபெற்றது.


இதுகுறித்து தருமபுரி தேர்தல் பொது பார்வையாளர் திருமதி. அருணா ரஜோரியா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது: இந்திய தேர்தல் ஆணையத்தால், பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 தொடர்பான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தமிழ்நாட்டில் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.


தேர்தல் ஆணையம் தருமபுரி மக்களவை தொகுதிக்கு தேர்தல் பார்வையாளர்களை (Observers) நியமித்துள்ளது. வேட்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் தேர்தல் நடத்தை குறித்து எந்தவிதமான புகார் அல்லது பிரச்சனை இருந்தாலும், அதை பார்வையாளரின் கவனத்திற்கும் கொண்டு வந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு செல்லுவதற்கான சாலை வசதிகள் மற்றும் வாக்குச்சாவடிகளில் உள்ள அடிப்படை வசதிகள், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். வாக்குப்பதிவிற்கு தேவையான மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள், மற்றும் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்துவதற்கு தேவையான அழியாமை, உறைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வாக்குப்பதிவு அலுவலர்களிடம் பாதுகாப்பாக வழங்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.


வாக்குப்பதிவு நாள் அன்று எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் இந்திய தேர்தல் ஆணையத்தின் அனைத்து விதிமுறைகளையும் முழுமையாக பின்பற்றி வாக்குப்பதிவு சிறப்புற நடைபெற அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். அமைதியான மற்றும் சுமூகமான வாக்குப்பதிவு நடப்பதை உறுதி செய்வதற்கும், வாக்காளர்கள் எந்தவித அச்சமின்றி தங்கள் வாக்குகளை செலுத்துவதற்கு, தேர்தல் பணியில் உள்ள அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் தெரிவித்தார்.


முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி. இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி சுழற்சி முறையில்  (Randomization) இரண்டாம் கட்டமாக பிரிக்கும் பணி இன்று நடைபெற்றது. முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு மையத்தில் தேர்தல் குறித்த விளம்பரங்கள் ஒளிபரப்புகள் கண்காணிக்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


பின்னர், தேர்தல் பொது பார்வையாளர் திருமதி. அருணா ரஜோரியா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி. இ.ஆ.ப., ஆகியோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாக்குப்பதிவு அன்று பயன்படுத்தப்படும் வாக்காளர்பட்டியல், படிவங்கள், உறைகள், எழுது பொருட்கள் தேர்தல் பொருட்களை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி. இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, வீடியோ கண்காணிப்பு குழுக்களுக்கான பணிகள் குறித்தும், தொலைதொடர்பு நிறுவனங்கள் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குபதிவு நடைபெறும் தினத்தில் தொலைத்தொடர்பு சதனங்கள், செல்போன் டவர்கள் தடையின்றி செயல்படவும் ஏப்ரல் 18 மற்றும் 19-ம் தேதி BSNL, Airtel, Aircel, jio ஆகிய நிறுவனங்களின் இணைப்புகள் துண்டிக்கப்படமால் தருமபுரி மாவட்டத்தில் அனைத்து மலைபகுதிகள், கடைகோடி பகுதிகளுக்கும் இணையதள சேவைகள் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என தொலைதொடர்பு கிளை மேலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.


இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ந.ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், வாக்குப்பதிவு இயந்திர பெறுப்பு அலுவலர் திருமதி.தேன்மொழி, மேட்டூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஆரோக்கியராஜ், சேலம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணகுமரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு.பிரகாசம், தனி வட்டாட்சியர்கள் (தேர்தல்) திரு.அசோக்குமார், திரு.வெங்கடேசன் உள்ளிட்ட தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad