Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே குடியை நிறுத்த சொன்ன மனைவியை கழுத்து அறுத்து கொன்ற கணவன்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள குண்டுபள்ளம் கிராமத்தை  சேர்ந்தவர் சிவலிங்கம் (65) இவர் மாட்டு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கனகா (63), சிவலிங்கம் மதுவிற்க்கு அடிமையாகி அடிக்கடி மது குடித்து வந்ததால் கனவன் - மனணவி இருவருக்கும் அடிக்கடி  தகராறு  ஏற்பட்டு வந்துள்ளது.


வழக்கம் போல் இன்று காலை  மது அருந்திவிட்டு  தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த சிவலிங்கத்தை, பார்த்து மனைவி கனகா தெண்ணெய் மட்டைகள் எல்லாம் தண்ணீரில் நனைகின்றது பார்த்து வேலை செய் கூறி உள்ளார், இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சிவலிங்கம் அருகிலிருந்த ஒலக்கையால் கனகா தலையில் அடித்துள்ளார், மயங்கி விழுந்த கனகாவின் கழுத்தை கொடுவாளால் அறுத்துள்ளார். இதில் கனகா துடித்து துடித்த சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாரண்டஅள்ளி காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,  மேலும்  சிவலிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies