Type Here to Get Search Results !

காரிமங்கலம் அருகே பேகாரஅள்ளி கிராமத்தில் ஸ்ரீ சாமூன்டீஸ்வரி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம் விழா.


தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே  உள்ள பேகாரஅள்ளி கிராமத்தில்  ஸ்ரீசாமூன்டீஸ்வரி அம்மன் திருக்கோவில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக பெருவிழா நடைப்பெற்றது. இந்த விழா கடந்த 19ம் தேதி  வெள்ளிக்கிழமை கொடியேற்றி, கணபதி பூஜையுடன் தொடங்கியது.  


முக்கிய நாளான இன்று அதிகாலை முதலே திருப்பள்ளியெழுச்சி, மங்களஇசை, திருச்சுற்றுக் கலசநீராட்டு,  ஆனைந்தாட்டல், காப்பணிவித்தல், நான்காம் காலவேள்வி, பேரொளி வழிபாட்டுடன் பூர்ணாஹதி நடந்தது. 


இதனையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்தத்தை ஊர்கவுண்டர்கள், மந்திரிகவுண்டர்கள், தர்மகர்த்தா மற்றும் ஊர்முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று  கோயில் உச்சியில் உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து தீபாரதனை காட்டினார். 


பின்னர்  கலசத்திற்கு ஊற்றிய புனித நீர்  பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்ரீ சாமூன்டீஸ்வரி அம்மனுக்கு பல்வேறுதிரவியங்களால்  அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு  மகா தீபாரதனை காட்டப்பட்டது.


ஸ்ரீ சாமூன்டீஸ்வரி  அம்மன் சிறப்பு அலங்காரத்தில்  பக்தர்களுக்கு அருள் பாலித்தார், இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 


இந்தவிழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாகுழுவினர் செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884