Type Here to Get Search Results !

ஆதாரவற்ற உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி தன்னார்வலர்.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலை விபத்தில் அடிபட்டு காயம் அடைந்துள்ளார். இவரை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.


உயிரிழந்தவர் இவரைப் பற்றி விசாரித்ததில் இவருக்கு உறவினர்கள் என்று யாரும் இல்லை என்பது தெரியவந்தது, இன்று ஓசூர் போக்குவரத்து சிறப்பு காவல் ஆய்வாளர் பரிமளா மற்றும் மை தருமபுரி அமைப்பின் தலைவர் தமிழ்செல்வன் ஆகியோர் அவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 86 புனித உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies