அவர் தனது உரையில் மொழிபெயர்ப்பினுடைய தோற்றம் வளர்ச்சியை பற்றிய ஒரு அறிமுகத்தை பற்றி எடுத்துரைத்தார். மேலும் ஆங்கிலத் துறை மாணாக்கர்கள் எவ்வாறு மொழிபெயர்ப்பில் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
முன்னதாக ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) முனைவர் மோகனசுந்தரம் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். துறைத் தலைவரும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமான முனைவர் சி. கோவிந்தராஜ் அவர்கள் விழா துவக்க உரையாற்றி மொழிபெயர்ப்பின் தற்போதைய நிலை பற்றியும் பேசினார். முன்னதாக முதலாம் ஆண்டு மாணவி செல்வி. சோபியா வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினரை செல்வி. காவியா அறிமுகப்படுத்தி வைத்தார்.
இறுதியாக முதலாம் ஆண்டு மாணவி ஆசிரா நன்றி உரை வழங்கினார். இந்நிகழ்வை மாணவி விஜயஸ்ரீ தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஆராய்ச்சி மாணாக்கர்கள் பெருமாள் பழனி மற்றும் பூஜா ஸ்ரீ ஆகியோர் செய்து இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக