Type Here to Get Search Results !

வள்ளல் அதியமான் கோட்டத்தில் சித்ரா பவுர்ணமி - வள்ளல் அதியமான் அவர்களின் பிறந்த நாள் அரசு விழா.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சி, வள்ளல் அதியமான் கோட்டத்தில் சித்ரா பவுர்ணமி - வள்ளல் அதியமான் அவர்களின் பிறந்த நாள் அரசு விழாவில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வள்ளல் அதியமான் மற்றும் அவ்வையார் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு இன்று மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சி, வள்ளல் அதியமான் கோட்டத்தில் சித்ரா பவுர்ணமி - வள்ளல் அதியமான் அவர்களின் பிறந்த நாள் அரசு விழாவில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வள்ளல் அதியமான் மற்றும் அவ்வையார் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு இன்று (23.04.2024) மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


தமிழ் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபங்களில் அன்னார்களது பிறந்த நாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அரசு விழாவாகக் கொண்டாட அரசு ஆணையிடப்பட்டுள்ளது.


நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை வளர்த்திட அரும்பாடுபட்ட தமிழறிஞர்கள், தமிழகத்தை உயர்த்திட தம் ஆயுளையே அர்ப்பணித்தார்கள். நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டு தம் இன்னுயிரை ஈந்த தியாகிகளை பெருமைப்படுத்தும் வகையில் தமிழகத்தில் பல்வேறு மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் பிறந்த நாள் விழா செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகின்றது.


அந்த வகையில், வள்ளல் அதியமான் கோட்டத்தில் சித்ரா பவுர்ணமி தினமான இன்றைய தினம் வள்ளல் அதியமான் அவர்களின் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் கலந்துக்கொண்டு வள்ளல் அதியமான் மற்றும் அவ்வையார் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சு.மோகன், நல்லம்பள்ளி வட்டாட்சியர் திருமதி.பார்வதி, நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.லோகநாதன், திரு.ஆறுமுகம் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884