Type Here to Get Search Results !

பாலக்கோடு பகுதியில் வெயில் தாக்கத்தால் கருகும் தக்காளி செடிகள்- வரத்து குறைவால் விலை கிடுகிடுவென அதிகரிப்பு


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மார்கெட்டிற்கு இரண்டு மாதங்களுக்கு பிறகு தக்காளி வரத்து குறைவினால் விலை உயர்ந்து கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பாலக்கோடு , காரிமங்கலம், பெல்ரம்பட்டி, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, கம்பைநல்லூர். உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்வது வழக்கம் இதன் மூலம் சராசரி தினசரி 500 டன் தக்காளி விளைவிக்கப்பட்டது. உள்ளூர் தேவைக்குப்போக தென் மாவட்டங்கள் சென்னை மற்றும் கேரள கர்நாடக மாநிலங்களுக்கு அனுப்புவது வழக்கம். கடந்த சில  மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ 7ரூபாய் முதல் 10ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. 

தற்போது கோடை வெயில் தாக்கம்  மாவட்டத்தில் 104டிகிரி வெப்ப நிலை அளவிற்கு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் தக்காளி செடிகளில் பூ, பிஞ்சு உதிர்ந்து செடிகள் கருகும் நிலையில் உள்ளதால் மார்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்ததின் காரணத்தால் கிடுகிடுவென விலை உயர்ந்து கொள்முதல் விலை கிலோ 35ரூபாய்க்கும் 15கிலோ கொண்ட கூடை 500ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.


தக்காளி விலை இன்னும் சில வாரங்களில் மேலும் விலை உயரும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றன்ரனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies