Type Here to Get Search Results !

மதுபோதையில் பள்ளிக்கு வந்த தலைமையாசிரியர் பணிநீக்கம்.


தருமபுரி மாவட்டம், தருமபுரி ஒன்றியம், மாரவாடி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளி வேலை நேரத்தில் மதுபோதையில் இருந்தது, விசாரணையில் உண்மை என தெரிய வர தலைமையாசிரியர் தருமபுரி மாவட்ட கல்வி அலுவலரால் (தொடக்கக் கல்வி) பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.


தருமபுரி மாவட்டம், தருமபுரி ஒன்றியம், மாரவாடி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் திரு.எம்.குணசேகரன் என்பவர் பள்ளி வேலை நேரத்தில் மதுபோதையில் இருந்தது மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்க கல்வி) அவர்களின் பள்ளிபார்வையின் போது கண்டறியப்பட்டது. இவரை மருத்துவ பரிசோதனை உட்படுத்தி மருத்துவ சான்று பெறப்பட்டது. இவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விசாரணை அலுவலரின் விசாரணை அறிக்கை மற்றும் மருத்துவரின் சான்றுப்படியும் இவர் மது அருந்தி இருந்தது நிரூபணமானது. தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது. இதனால் மேற்கண்ட தலைமையாசிரியரை தருமபுரி மாவட்ட கல்வி அலுவலரால் (தொடக்கக் கல்வி) இன்று (05.04.2024) பணியிலிருந்து விடுவித்து ஆணை வழங்கப்பட்டது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies