அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே அதிமுக சார்பில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அரூர் எம்எல்ஏ வே.சம்பத்குமார் தலைமை வகித்தார் மாவட்ட அதிமுக செயலாளரும் பாலக்கோடு எம்எல்ஏவுமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர், இளநீர், தர்பூசணி உள்ளிட்ட பழ வகைகள் வழங்கி தொடங்கிவைத்தார்.
இதில் பாபிரெட்டிபட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி, அரூர் ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி நகர செயலாளர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக