Type Here to Get Search Results !

அரூர் அருகே சர்க்கரை ஆலை அதிகாரி வீட்டில் 24 பவுன் கொள்ளை நபர்கள் கைவரிசை.


அரூர் அருகே உள்ள ஆலாபுரம் கள்ளியூரை  சேர்ந்தவர் குமார் (56) இவர் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில்  இன்ஜினியராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி மலர்(51) இவர் கீரைப்பட்டி தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் இவர்களுக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர் இந்நிலையில் குமார் கடந்த 22ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் மதுரையில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்.


மறுநாள் ஊர் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 24 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார், வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது இது குறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் குமார் புகார் அளித்தார்.


புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884