தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அதிமுக நகர கழகம் சார்பில் பாலக்கோடு BDO ஆபிஸ் முன்பு தண்ணீர் பந்தல் திறப்பு விழா, பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் தலைமையில், ஏப்ரல், 26, வெள்ளிக்கிழமை, இன்று காலை 11 மணிக்கு நடைப்பெற்றது.
இதில் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தண்ணீர் பந்தலை திறந்து வைத்தவர், கோடை வெயில் தாக்கத்தில் இருந்து பொது மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தர்பூசணி, இளநீர், நீர்மோர் , வெள்ளரிக்காய், பனை நுங்கு உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் , தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக