Type Here to Get Search Results !

பாளையம் கிராமத்தில், சனத்குமார் ஆற்றில் சட்டவிரோதமாக நொரம்பு மண் திருடிய 40 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 டிராக்டர் மற்றும் ஜே.சி.பி பறிமுதல் 4 பேர் கைது.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி பஞ்சப்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள ஆறு, ஏரிகளில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் சட்டவிரோதமாக நொரம்பு மண், மணல் உள்ளிட்டவைகளை கடத்தி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்க்கு புகார் அளித்தனர்.


இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சாந்தி இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து நேற்றிரவு பஞ்சப்பள்ளி போலீசார் பாளையம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சனத்குமார் ஆற்றின் அருகே 2 டிராக்டரில் ஜே.சி.பி.எந்திரம் மூலம் நொரம்பு மண் கடத்துவது தெரிய வந்தது.


உடனடியாக அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில் பாளையம் கிராமத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவர் சேகர் (வயது. 52) கொக்கிகல் கிராமத்தை சேர்ந்த டிராக்டர் உரிமையாளர் முருகன் (வயது.40), பாலானம்பட்டியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் சுகந்திரன் (வயது.28), பஞ்சப் பள்ளியை சேர்ந்த ஜே.சி.பி.டிரைவர் கிரி (வயது. 20) என்பது தெரிய வந்தது.


4 பேரையும் கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய 40 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 2 டிராக்டர்கள் மற்றும் ஜே.சி.பி,யை பறிமுதல் செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies