தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கம்பைநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (44)இவர் அங்குள்ள சுப்பிரமணியர் கோயில் தெருவில் கடந்த 20 வருடங்களாக நகைக்கடை நடத்தி வருகிறார் மதிய உணவிற்காக தனது வீட்டிற்கு செல்லும்போது அவரது மகன் கடையை கவனித்துக் கொள்வது வழக்கம் கடந்த 16ஆம் தேதி வழக்கம் போல் மதிய உணவிற்காக கணேசன் தனது வீட்டிற்கு சென்ற சமயத்தில் அவரது மகன் கடையில் இருந்தார் உணவருந்தி விட்டு மீண்டும் கடைக்கு திரும்பினார் அப்போது நகைகளை சரிபார்த்த போது 15 பவுன் மாயமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து தனது மகனிடம் கேட்டபோது தனக்கு ஒன்றும் தெரியாது என தெரிவித்தார் இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தார் அதில் கணேசன் சாப்பிடுவதற்காக சென்றிருந்தபோது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கடைக்கு வந்து சென்றது தெரியவந்தது.
அவர்கள் கடையில் இருந்த கணேசன் மகனிடம் 200க்கு சில்லரை கேட்டுள்ளனர் சில்லறையை எடுத்து எண்ணிக் கொண்டிருந்தபோது பணப்பெட்டியில் இருந்த 49 மோதிரங்கள் 4 தோடு உள்ளிட்ட 15 பவுன் (சுமார் 125 கிராம்)தங்க நகையை நைசாக திருடிய அவர்கள் சில்லறையை வாங்கிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்வது பதிவாகி இருந்தது அவர்களை கண்டுபிடித்து நகைகளை மீட்டுதரும்படி கணேசன் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சில்லரைகேட்டு நாடகம் ஆடி நகையை திருடி சென்ற இரண்டு மர்ம நபர்கள் குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக