தருமபுரி மாவட்டம், பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் கணக்கு பார்வையாளராக, பெங்களுரு சுங்க துறை துணை ஆணையர் பிரமோத்நாயக், அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து பாலக்கோடு, தாசில்தார் அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு, பிரமோத்நாயக், அவர்கள் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான கணக்கு வழக்குகளை எவ்வாறு முறையாக கையாள்வது என்பன குறித்தும், கணக்கு வழக்குகளை உடனுக்குடன் தெரியபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினார்.
அது சமயம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், தாசில்தார் ஆறுமுகம், துணை தாசில்தார் எழில் மொழி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக