Type Here to Get Search Results !

வரும் தேர்தலில் முன்னாள் படைவீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுதிக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு.


தருமபுரி மாவட்ட முன்னாள் படை வீரர்கள், பாராளுமன்ற பொதுத்தேர்தலில் சிறப்பு காவலர்களாக தங்களை ஈடுபடுத்திகொள்ள விருப்பத்தினை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். 

நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னாள் படைவீரர்களை சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்திடுமாறு கோரப்பட்டுள்ளார்கள் என்பதால் தருமபுரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அனைவரும் தங்களின் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுடன் தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி தங்களது விருப்பத்தினை விண்ணப்பமாக அளிக்குமாறும், நேரில் வந்து செல்ல இயலாதவர்கள் அலுவலக தொலைபேசி எண்ணிலும் (தொ.பே.எண்.04342-297877) தெரிவித்து விருப்ப மனு வழங்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies