தருமபுரி அருகே பத்து வயது சிறுவன் கிணற்றில் தள்ளி கொலை; பணிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் கைது; ஹோமோ செக்ஸால் நடந்த விபரீதம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 14 மார்ச், 2024

தருமபுரி அருகே பத்து வயது சிறுவன் கிணற்றில் தள்ளி கொலை; பணிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் கைது; ஹோமோ செக்ஸால் நடந்த விபரீதம்.


தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேவுள்ள மிட்டாரெட்டிஅள்ளி காலணியை சேர்ந்த மன்மதன் .. சீதா தம்பதியின் மகனான பொன்னரசு(10)  என்ற சிறுவன் வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்தவன் மாயமாகிவிட்டதாக பெற்றோர் அதியமான் கோட்டை  காவல்நிலையத்தில் புகார் ஒன்றினை அளிக்க,  பத்து வயதுடைய சிறுவன் என்பதால் உடனடியாக விசாரணையில் இறங்கியது காவல்துறை..

முருகன் கோவிலுக்கு மாலை அணிந்திருந்த சிறுவன் பொன்னரசுவை, வீட்டருகே உள்ள உறவினரான இளங்கோ (19) என்ற வாலிபர் மாங்காய் பறித்து வரலாம் என கூறி அழைத்துச்சென்றதும், இருவரும் ஒன்றாக நடந்து சென்றவர்கள், சிறிது நேரத்திற்கு பிறகு இளங்கோ மட்டும் தனியாக நடந்து வரும் சிசிடிவி பதிவுகள் காவல்துறைக்கு கிடைக்கவே, வாலிபர் இளங்கோவை  அதியமான்கோட்டை காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணான தகவலை தரவே, காவல்துறைக்கு சந்தேகம் வலுத்தது, சிறுவனை அருகே இருந்த விவசாய கிணற்றில் தள்ளி கொன்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்த நிலையில் தீயணைப்பு த்துறையினர் வரவழைக்கப்பட்டு இரவு முழுவதும் தேடியதில் கிணற்றுக்குள் சிறுவன் சடலமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டது, பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிறுவனின் சடலத்தை அனுப்பி வைத்த காவல்துறையினர் விசாரணை வளையத்திலிருந்த இளங்கோவை விசாரிக்கும் விதத்தில் காவல்துறை விசாரித்தில், நடந்தது என்ன என்பதை ஒப்புக்கொண்டான் வாலிபர் இளங்கோ.


வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பொன்னரசுவை மாங்காய் பறித்து வரலாம் எனக்கூறி தந்திரமாக பேசி அழைத்துச்சென்று  மறைவான இடத்தில் வைத்து சிறுவனின் வாயில் இளங்கோ ஆணுறுப்பை வைத்தும் தனது பாலியல் இச்சையை தீர்க்க முயன்றிருக்கிறான் முருகனுக்கு மாலையிட்டிருக்கும் தன்னிடம் இப்படி தவறாக நடந்துகொள்கிறாய் தனது பெற்றோரிடம் சொல்லியே தீருவேன் என சிறுவன் சத்தம் போடவே, நடந்த சம்பவம் வெளியே தெரியவந்தால் பெரிய பிரச்சனையாகி விடும் என அச்சமடைந்து, சிறுவன் பொன்னரசு உயிரோடு இருந்தால் தனக்கு ஆபத்து என கருதி அருகே இருந்து கிணற்றில் தள்ளிவிட்டு கொன்றதாக வாலிபர் இளங்கோ வாக்குமூலம் அளிக்கவே, இளங்கோவை கைது செய்தது அதியமான் கோட்டை காவல்துறை கைதாகியுள்ள வாலிபர் இளங்கோ அரசு பள்ளி ஒன்றில் பணிரெண்டாம் வகுப்பு  படித்து வருவது விசாரணையில் தெரியவந்திருக்கிறது


தனது பாலியல் இச்சையை தீர்க்க சிறுவனை கொலை செய்த சம்பவத்தில் பணிரெண்டாம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தருமபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது, சிறுவன் கொலை சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்ய சிசிடிவி பதிவுகள் பெரிதும் உதவியாக இருந்திருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad