பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மேலாண்மை துறை சார்பாக 5 நாள் தொழில் முனைவர் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு துவக்க விழா நடைபெற்றது - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 மார்ச், 2024

பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மேலாண்மை துறை சார்பாக 5 நாள் தொழில் முனைவர் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு துவக்க விழா நடைபெற்றது


தர்மபுரி அடுத்த  பைசுஹள்ளில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்டம் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மேலாண்மை துறை சார்பாக 5 நாள்  தொழில் முனைவோர்  மேம்பாட்டு பயிற்சி வகுப்பு துவக்க விழா நடைபெற்றது முனைவர் கார்த்திகேயன் மேலாண்மை துறை தலைவர்  தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம் பற்றிய  அறிமுக உரை நிகழ்த்தினார் முனைவர் சுரேஷ் மேலாண்மை துறை உதவி பேராசிரியர் வாழ்த்துரை வழங்கினார் முன்னதாக இயக்குனர் பொறுப்பு முனைவர் மோகனசுந்தரம் தலைமை உரை நிகழ்த்தினார்.

முனைவர் சுப்பிரமணி பாரதி மேலாண்மை துறை பெரியார் பல்கலைக்கழகம் சேலம் மற்றும் திரு கண்ணன் மாவட்ட முதன்மை வங்கி அதிகாரி தருமபுரி திரு எழில் மணி நிதி ஆலோசகர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு தொழில் முனைவோர் பற்றி சிறப்பு சொற்பொழிவு வழங்கினார்கள் முனைவர் செல்வவிநாயகம் நன்றியுரை வழங்கினார், இந்நிகழ்வில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad