சேலம் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஆடவர் கைப்பந்து போட்டிகள், ராசிபுரம் முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் 18-03-2024 இன்று தொடங்கியது. அதில் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி ஆடவர் கைப்பந்து அணியினர், நான்காம் இடம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
நான்காம் இடம் பெற்ற தர்மபுரி அரசு கலைக்கல்லூரி ஆடவர் கைப்பந்து அணிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் கோ. கண்ணன் அவர்கள் தகுதி சான்றிதழையும் கோப்பைகளையும் வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் கு. பாலமுருகன், விளையாட்டு குழு பேராசிரியர் உறுப்பினரும் விலங்கியல் துறைத்தலைவருமான முனைவர் கே விஜயதேவன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் ஆர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக