விவசாயம் செய்ய கிணறு தோண்டுதல், குடிதண்ணீர் வசதி ஏற்படுத்துதல், விவசாயம் செய்ய மின் வசதி பெறுதல், விவசாயம் என்று அரசு வழங்கும் கிசான் உறுப்பினர் அட்டை பெற முடியவில்லை, விவசாயத்திற்கு சொட்டுநீர் பாசன வசதி அரசிடம் உதவி பெற முடியவில்லை, பயிரிடும் விவசாய பயிருக்கு காப்பீடு செலுத்துதல், விவசாயம் செய்ய மின் வசதி பெறுதல் கூட்டுறவு வங்கியில் விவசாய கடன் உதவி பெற முடியவில்லை உள்ளிட்ட எந்த வேலையும் செய்ய முடியவில்லை எங்கள் விவசாயத்திற்கு நில பட்டா இல்லை ஓட்டு போட்டு நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என ஆதங்கத்தை வெளிப்படுத்தினர் மேலும் நடைபெறுகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என சுமார் 100 க்கும் மேற்பட்டோர் பேனர் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் வட்டாட்சியருமான சுகுமார் பென்னாகரம் காவல் ஆய்வாளர் உமா சங்கர் பவளந்தூர் கிராம நிர்வாக அலுவலர் சங்கர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் அனைத்து விவசாய நிலத்திற்கும் உரிய முயற்சி மேற்கொண்டு பட்டா வழங்குவதாக தெரிவித்தனர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதாக தெரிவித்து கலைந்து சென்றனர் இதனால் நாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பதாக பேனர் வைத்து ஆர்பாட்டம் செய்த பொதுமக்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக