பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு தருமபுரி நாடாளுமன்ற பாமக வேட்பாளராக செளமியா அன்புமணி அறிவிக்கப்பட்டதையடுத்து தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 22 மார்ச், 2024

பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு தருமபுரி நாடாளுமன்ற பாமக வேட்பாளராக செளமியா அன்புமணி அறிவிக்கப்பட்டதையடுத்து தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.


தருமபுரி மாவட்ட, நாடாளுமன்ற வேட்பாளராக பாஜக கூட்டணி சார்பில் பாமக தலைவர் அன்புமணி அவர்களின் மனைவி செளமியா அன்புமணி அறிவிக்கப்பட்டார்.


இதையடுத்து பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு பாமக மாவட்ட அமைப்பு தலைவர் கே.இ.கிருஷ்ணன், பாஜக தொகுதி பொறுப்பாளர் சங்கீதா ஆகியோர் தலைமையில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


இந்நிகழ்ச்சியில் பாமக முன்னாள் உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் சின்னசாமி, ஒன்றிய செயலாளர்கள் துரை, ராஜதுரை, நகர தலைவர் ராஜா, ஒன்றிய தலைவர்கள் மாதையன் ஏழுகுண்டன், உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் முருகேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேடி, அமமுக நகர செயலாளர் ஞானம், பாஜக மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் பெரியசாமி, துணைத் தலைவர் சிவா, நகர மகளிர் அணி தலைவர் வித்யா, முன்னாள் நகர தலைவர் வேலு ஐ.டி.விங்க் நிர்வாகி சின்னராஜ், நகர பொருளாளர் முனியப்பன், நகர செயலாளர் நந்தகிரி, கல்வி பிரிவு ஒன்றிய தலைவர் கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பிணர் ஸ்ரீதேவி உள்ளிட்ட பாமக, பாஜக, அமமுக கட்சியை சேர்ந்த திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad