தருமபுரி பாராளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணியும் அதிமுக கூட்டணியும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் திமுக சார்பில் ஆ.மணி, அதிமுக கூட்டணியில் அதிமுகவைச் சேர்ந்த டாக்டர் ஆர்.அசோகன், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை பாஜக கூட்டணி சார்பில் தர்மபுரி பாராளுமன்ற தொகுதிக்கு பாட்டாளி மக்கள் கட்சி தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது, அதில் இரா.அரசாங்கம் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அதிரடி மாற்றமாக தற்போது, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி திருமதி சௌமியா அன்புமணி அவர்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து தர்மபுரி, பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியினரும், பாஜகவினரும் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக