தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையின் சார்பாக உலக கவிதை தினத்தை முன்னிட்டு இணையவழி கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் ஈரோடு சிக்கைய நாயக்கர் கல்லூரி ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் முனைவர். சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'கவிதையும் உலக அமைதியும்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இவர் தனது உரையில் கவிதைகள் எவ்வாறு மனித குலத்தில் மனித மனத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை பற்றி பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த ஆங்கில இலக்கிய கவிஞர்களை உதாரணமாகக் கொண்டு சிறப்புற எடுத்துரைத்தார்.
முன்னதாக இத்துறை மாணவ மாணவியர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தமான கவிஞர்களை பற்றின சிறப்பு உரையை நிகழ்த்தினர். முனைவர் பற்ற ஆராய்ச்சி மாணவன் சமீர் தான் எழுதிய ஆங்கில கவிதைகளை இணையவழியில் வாசித்து சிறப்பு விருந்தினரின் பாராட்டைப் பெற்றார். முன்னதாக இந்நிகழ்வில் ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) முனைவர் மோகனசுந்தரம் தலைமை உரையாற்றினார். தொடர்ந்து நிகழ்வு ஒருங்கிணைப்பாளரும் துறை தலைவருமான பேராசிரியர். கோவிந்தராஜ் துவக்க உரையாற்றினார்.
மாணவன் ஹரிஹரன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் மாணவிவி பூஜா ஸ்ரீ வரவேற்று பேசினார். இறுதியாக முதலாம் ஆண்டு மாணவி ஷைனி நன்றி உரை வழங்கினார். இந்நிகழ்வை இரண்டாம் ஆண்டு மாணவி நிவேதிதா தொகுத்து வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக