Type Here to Get Search Results !

இருசக்கர வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே வாலிபர் உயிரிழப்பு.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பெரும்பாலை அடுத்த பெத்தானூர் காட்டு வளைவு பகுதியில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தனியார் பால் கம்பெனியில் பணிபுரிந்து வருபவர் சின்னக்கண்ணு மகன் இளங்கோவன் வயது 36 இவர் காலையில் பெருந்துறையில் இருந்து பென்னாகரம் நோக்கி கிருஷ்ணாபுரம் வீட்டிற்கு அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார் இவர் பெரும்பாலை அருகே பெத்தானூர் காட்டுவளைவு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அப்பகுதியில் உள்ள அக்கம்பக்கத்தினர் பெரும்பாலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இது குறித்து பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884