சீட்டு, சீட்டை தாண்டி நோட்டு என்ற அடிப்படையில் சில கட்சிகள் அ.தி.மு.க - பா.ஜ.க.வுடன் பேரம் பேசுகின்றன என வி.சி.கவின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, பேச்சு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 19 மார்ச், 2024

சீட்டு, சீட்டை தாண்டி நோட்டு என்ற அடிப்படையில் சில கட்சிகள் அ.தி.மு.க - பா.ஜ.க.வுடன் பேரம் பேசுகின்றன என வி.சி.கவின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, பேச்சு.


தர்மபுரி மாவட்டம் அரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்  வெல்லும் சனநாயக மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா தலைமையில் நடைபெற்றது இதில் விசிகவின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் துணைப் பொது செயலாளருமான எஸ்.எஸ். பாலாஜி, கலந்து கொண்டு பேசியதாவது 



விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுத்த வரை பாஜகவை வீழ்த்துவதற்காக திமுக கூட்டணியில் கொள்கை ரீதியாக அங்கம் வைத்துள்ளதாகவும், சீட்டு, சீட்டை தாண்டி நோட்டு என்ற அடிப்படையில் சில கட்சிகள் அ.தி.மு.க - பா.ஜ.கவுடன் பேரம் பேசுகின்றன என்று கூறினார்.


செய்திகளை பார்க்கும்போது காலையில் ஒரு கட்சியுடன் கூட்டணி,  ஒரு மணி நேரம் கழித்து இன்னொரு கட்சியுடன் ஒரு கூட்டணி, மாலையில் ஒரு கூட்டணி என அந்த கட்சியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் பேசுகிறார், கட்சித் தலைவர் மகன் மற்றும் நிர்வாகிகள் என பேரம் பேசுகின்றனர் என்றும் கூறினார்.


தமிழகத்தில் இண்டியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் பா.ஜ.க.வின் கோரமுகம், உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது. 1996-ல் தமிழகத்தில் அ.தி.மு.க. மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தோல்வியடைந்தார். இன்றைக்கு பா.ஜ.க.வின் நிலையும் அதுதான். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தோல்வியடைந்ததை போல் தேசிய அளவில் பா.ஜ.க. தோல்வியடையும்


தமிழகத்தில் மிகவும் மோசமான திசையை நோக்கி பா.ம.க. செல்கிறது. தேர்தல் ஆணையர்கள் நியமனம் நியாயமான முறையில் நடைபெறவில்லை. என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad