Type Here to Get Search Results !

பொதுமக்கள் தங்கள் வசமுள்ள உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அருகிலுள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் தகவல்.


நாடாளுமன்ற மக்களவைக்கான பொதுத்தேர்தல் - 2024 அறிவிப்பு வெளியாகி, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. எனவே, பொதுமக்கள் படைக்கலன்களை வைத்துக்கொள்ளவும், எடுத்துச் செல்லவும், தடையாணை உடன் நடைமுறைக்கு வந்துள்ளது.

எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து படைக்கல உரிமைதாரர்களும், அவர்களுடைய படைக்கலன்களை அவர்களுடைய இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் பாதுகாப்பாக ஒப்படை செய்து உரிய ஒப்புதல் சீட்டு பெற்றுக் கொள்ளவேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் தினத்திலிருந்து ஒரு வாரத்திற்கு பின்னர் தமது பொறுப்பில் திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies