தர்மபுரி மாவட்டம், இண்டூர், பவர்கிரிட் கார்பொரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் சார்பாக, கார்பொரேட் சமூக பொறுப்பு கொள்கை 2023-24 திட்டத்தின் கீழ் தரமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு தொற்று நீக்கும் கருவி, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை டேபிள், அதி நவீன நுண்கதிர் காணொலி கருவி, மயக்க மருந்து கருவி, கண்பரிசோதனை மற்றும் கண் அறுவை சிகிச்சை கருவி, உள்ளிட்ட 67 இலட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊரக நல பணிகள் மற்றும் சுகாதார இணை இயக்குனர் மருத்துவர் சாந்தி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மருத்துவ உபகரணங்களை, மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு வழங்கி பேசியதாவது. இந்த மருத்துவ உபகரணங்கள் நவீன வசதிகள் உடையதாகும், இதனை பயன்படுத்தி நோயாளிக்கு தரமான முறையில் விரைந்து சிகிச்சையளிக்க முடியும் என்றும் மருத்துவர்கள் இந்த உபகரனங்களை பத்திரமாக கையாள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அரூர் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணா ,தலைமை மருத்துவர் சசிரேகா, மருத்துவர்கள் விஸ்வேஷ்வரன், ஜெகதீசன், வசந்தராஜ், அனிதா, செந்தில்குமார், மருந்தாளுநர்கள் முத்துசாமி, முருகன், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

