Type Here to Get Search Results !

அரூர் பேரூராட்சியில் 27 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை முடிவற்ற பணிகளை திறந்து வைத்தார் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.எஸ்.செந்தில்குமார்.


தருமபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நான்குரோடு சந்தைமேடு அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.27லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகளுக்கு நகர செயலாளர் முல்லைரவி தலைமையில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.எஸ். செந்தில்குமார்  புதிய பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தும் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.

நான்குரோடு பகுதியில் ரூ.16லட்சம் மதிப்பில் நவீன குளிர்சாதன வசதியோடு பயணியர் நிழற்கூடம் அரூர் அம்பேத்கர் நகரில் ரூ.3.50 லட்சம் மதிப்பில் உயர்மின் கோபுர விளக்கு ஆகிய பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணியினை தொடங்கிவைத்தார் சந்தைமேட்டில் ரூ.7.50லட்சம் மதிப்பில் உயர்மின் கோபுர விளக்கை மக்கள் பயன்பாட்டிற்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.எஸ். செந்தில்குமார் திறந்து வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் வடக்கு ஆர்.வேடம்மாள் மேற்கு வே.சௌந்தரராசு கிழக்கு கோ.சந்திரமோகன் பொதுக்குழு உறுப்பினர் கலைவாணி நகர துணை செயலாளர்கள் செல்வதயாளன் விண்ணரசன் பொருலாளர் மோகன் ஒன்றிய பிரதிநிதி கணேசன் மாவட்ட பிரதிநிதி குமரன் அணிகளின் மாவட்ட பொருப்பாளர்கள் முகமதுஅலி முஜீப் திருவேங்கடம்  என்.முருகேசன் ரஜினிமாறன் முன்னாள் இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் சிட்டிபாபு சூர்யாவெங்கடேசன் கிளை கழக நிர்வாகிகள் விமல் மாதேஸ்வரன் தனபால் கவாஸ்கர் வினோதினி பத்மபிரியா பிரவின் கணபதி நாகராஜ் ராமன் ஏவிஎம் பாபு குமார்சிங் விஜய் ஆகாஷ் பாபு அண்ணாதுரை செந்தில் சக்திவேல் சரத் பரணி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies