இவர் கடந்த 1988 ம் ஆண்டு முதல் இந்தியநாட்டில் நடக்கும் பல்வேறு தேர்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார். அவர் பி. வி. நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் உள்ளிட்ட பிரதமர்கள், திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, எதியூரப்பா, தேவே கெளடா, ஏ. கே. அந்தோணி என பல முக்கிய தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலிலும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்தியா முழுவதும் சட்டசபை, நாடாளுமன்றம் உள்ளிட்ட பல தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார். கடந்த 2003 ம் ஆண்டு லிம்கா சாதனைப் புத்தகம் உள்ளிட்ட பல்வேறு சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். பாராளுமன்றத் தேர்தலில், இன்று, தர்மபுரி மாவட்ட பாராளுமன்ற தொகுதிக்கு, முதல் ஆளாக வெட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, தேர்தலில் வெற்றி பெற மாட்டேன் என்று நன்றாகத் தெரிந்தும் ஏன் வீணாகப் வேட்புமனு தாக்கல் செய்கிறீர்கள் என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். அவர்கள் சொல்வது என்னவோ உண்மை தான். கடந்த 1988-ம் ஆண்டு முதல் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இன்று 239 ஆவது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன், சுயேட்சையாகவே போட்டியிட்டு வருகிறேன். இந்தியாவின் ஒவ்வொரு சாமானிய மனிதனும் எவ்வித தயக்கமும் இன்றி அனைத்து தேர்தலிலும் போட்டியிடலாம் என்கின்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது பிரதான நோக்கம்.
இந்தியா முழுவதும் சட்டசபை, நாடாளுமன்றம் உள்ளிட்ட பல தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறேன். கடந்த 2003-ம் ஆண்டு லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றேன். இப்படி போட்டியிட்டு டெபாசிட் இழப்பதன் மூலம் பெரிய அளவில் பொருளாதாரம் இழந்து வந்தாலும், தொடர்ந்து சாதனை செய்ய வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் எனது வருவாய் முழுவதையும் தேர்தலில் போட்டியிடுவதற்கே செலவிட்டு வருகிறேன் என்றார்.
தோல்வியை கூட சாதனையாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை விதைத்த தேர்தல் மன்னன் கே.பத்மராஜன் அவர்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக