Type Here to Get Search Results !

காரிமங்கலம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் அனுசரிப்பு.

 

காரிமங்கலம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் மல்லுப்பட்டியில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வழக்கறிஞர் கோபால் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணை தலைவர் சூடப்பட்டி சுப்பிரமணி, மாவட்ட பொருளாளர் முருகன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சண்முகம், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் இராமமூர்த்தி, ஓட்டுனர் அணி சக்தி, நெசவாளர் அணி பாலமுருகன், முனிராஜ் முன்னிலை வகித்தனர்.



இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் முனுசாமி ஒன்றிய பொருளாளர் செந்தில்குமார், முன்னாள் மாவட்ட அவை தலைவர் தனக்கோடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வஜ்ரவேல், முன்னாள் ஒன்றிய அவைத் தலைவர் சிவாஜி, கணேசன், பெரியசாமி சின்னசாமி, அல்தாப், ஆனந்தன், கணேசன், கோவிந்தன்,குமார், பெரியண்ணன், கோககோலா முனிரத்தினம், மோகன், அண்ணாதுரை, பாலசுப்ரமணியம், ஆறுமுகம், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies