Type Here to Get Search Results !

தோமலஅள்ளி கிராமத்தில் கிணறு வெட்டும் போது நொரம்பு மண் சரிந்து விழுந்ததில் கூலி தொழிலாளி சாவு.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த செட்டிஅள்ளி கிராமத்தை சேர்ந்த கிணறு வெட்டும் தொழிலாளி கோவிந்தசாமி (வயது. 46) இவர் நேற்று முன்தினம்  தோமலஅள்ளி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது கிணற்றின் மேல் இருந்த நொரம்பு மண் சரிந்து விழுந்ததில் அதில் இருந்த கல் விழுந்து தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்து மயக்கமானார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே கோவிந்தசாமி இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்த பாலக்கோடு போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies