Type Here to Get Search Results !

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த  மலையப்பன் நகரை சேர்ந்த கருணாகரன் மகன் ரமேஷ் (வயது 35), என்பவர் நேற்று மாலை 6.30 மணிக்கு பாலக்கோட்டிலிருந்து காவேரிப்பட்டணம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.


அதே போன்று  காவேரிப்பட்டணம் அடுத்துள்ள  கத்தேரி கிராமத்தை சேர்ந்த சின்னராஜ் மகன் கணேஷ்குமார் (வயது35) என்பவர் காவேரிப்பட்டினத்தில் இருந்து பாலக்கோடு நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்,


எர்ரசீகலஅள்ளி பேருந்து நிறுத்தம் அருகே 2 வாகனங்களும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இருவருக்கும் தலை , நெஞ்சு பகுதிகளில் பலத்த அடி விழுந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


தகவலறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனனக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.bமேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies