Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பாலக்கோடு ஸ்ரீ புதூர்பொன்மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பந்தகால் நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஸ்ரீ புதூர் பொன்மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு வருடமும் மாசி மாதம், பெளர்ணமியை முன்னிட்டு நடைபெறுவது வழக்கம், இந்த ஆண்டு வரும் வரும் பிப்ரவரி மாதம் 19ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை ஸ்ரீ புதூர் பொன்  மாரியம்மன் திருவிழா நடைப்பெறுவதையொட்டி திரெளபதியம்மன் கோயில் வளாகத்தில் பாரம்பரிய முறைப்படி பூஜை செய்து பந்தக்கால் நட்டு கொடியேற்றி விழாவினை கோயில்  தர்மகர்த்தா இளங்கோ  துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, மந்திரி கவுண்டர் மாதையன்,  ஸ்ரீபுதூர் பொன் மாரியம்மன் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் பி.எல்.ரவி, செயலளர் ஞானம், பொருளாளர் ராஜா, மன்ற நிர்வாகிகள் தொகுதி கிருஷ்ணன், சம்பத், அருள்பாண்டியன், தர்மன், பாண்டியன், சரவணன், கருணாநிதி, சங்கர், குமரன், மோகன் மற்றும் 12கிராம ஊர்கவுண்டர்கள், மந்திரிகவுண்டர்கள், ஊர்முக்கிய பிரமுகர்கள், ஸ்ரீபுதூர் பொன் மாரியம்மன் இளைஞர் நற்பணி மன்ற இந்நாள், முன்னாள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies