Type Here to Get Search Results !

வட்டாட்சியர் அலுவலகம் முன்பிருந்து பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிந்து தலைமையில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடைப்பெற்றது.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பிருந்து, பாலக்கோடு காவல் உட்கோட்டம் சார்பில் நடைப்பெற்ற  ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு டி.எஸ்.பி. சிந்து அவர்கள்  தலைமை வகித்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு காவல் உட்கோட்டத்தை சார்ந்த பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், பஞ்சப்பள்ளி, மகேந்திர மங்கலம் உள்ளிட்ட காவல் நிலையத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர், சப். இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் திரளாக கலந்து கொண்டனர்.


இந்த விழிப்புணர்வு ஊர்வலமானது வட்டாட்சியர் அலுவலகம் முன்பிருந்து தொடங்கி, பஸ் நிலையம், கடைத்தெரு, ஸ்தூபி மைதானம், காந்தி சிலை வழியாக காவல் நிலையத்தை சென்றடைந்து, இந்த ஊர்வலத்தில் தலைகவசம், உயிர் கவசம், மிதவேக மிக நன்று, படியில் பயணம் நொடியில் மரணம் உள்ளிட்ட விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு போலீசார் அணிவகுத்து சென்றனர்.


அப்போது தலைகவசம் அணியாமல் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைகவசம் அணிந்து செல்ல  அறிறுத்தினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies