Type Here to Get Search Results !

காரிமங்கலம் அரசு மாதிரி பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா இலவச மிதிவண்டிகள் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், எம்.எல்.ஏ. வழங்கினார்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி காரிமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் கழக அமைப்பு செயலாளர் தருமபுரி மாவட்ட கழக செயலாளர் பாலகோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 97 பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். 


இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெரியண்ணன், ஒன்றிய குழு துணை தலைவர் செல்வராஜ், ஒன்றிய கழக செயலாளா் செந்தில்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் காவேரி, முன்னாள் சேர்மன் மாணிக்கம், தலைமை ஆசிரியர் மனோகரன் சேலம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் சாந்தகுமார்,ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சம்பத், துணை தலைவர் நட்ராஜ், முன்னாள் தலைவர் மாது, ஒன்றிய குழு உறுப்பினர் குமரன், ஒன்றிய அவைத் தலைவர் மகாலிங்கம்,கிளை செயலாளர் மாரி, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் பார்த்தீபன், லெனின், ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies