Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

முதியோர் இல்லத்தில் உயிரிழந்த மூதாட்டியை நல்லடக்கம் செய்த மை தருமபுரி தன்னார்வலர்கள்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் கோவிலூர் கிராமத்தில் உள்ள நிர்மலா முதியோர் இல்லத்தில் வெங்கடம்மாள் (75) என்பவர் கடந்த ஆறு மாதமாக தங்கி வந்துள்ளனர். வயது முதிர்வின் காரணமாக இன்று உயிரிழந்தார், அவரின் உடலை நல்லடக்கம் செய்ய நிர்மலா முதியோர் இல்ல கண்காணிப்பாளர் மை தருமபுரி தன்னார்வலர்களை கேட்டுக் கொண்டனர். 


மை தருமபுரி அமரர் சேவை மூலம் ஒருங்கிணைப்பாளர் சமூக சேவகர் அருணாசலம், சமூக சேவகர் மருத்துவர் முஹம்மத் ஜாபர் ஆகியோர் மூதாட்டியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி தன்னார்வலர்கள் அமரர் சேவை பிரிவின் மூலம் இதுவரை 80 உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies